Showing posts with label ஔவையார். Show all posts
Showing posts with label ஔவையார். Show all posts
Friday, November 27, 2009
முதல்வன்!
வாக்குண்டாம்,
நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம்,
மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
-ஔவையார்
பவள நிறத் திருமேனி கொண்ட,
தும்பிக்கை கொண்ட விநாயகன் பாதத்தில்,
மலரைக் கொண்டு
உடலை வருத்திக்கொள்ளாமல் துதிப்பவருக்கு,
நல்ல வாக்கு உண்டாகும்.
நல்ல மனசு உண்டாகும்.
இலட்சுமி பார்வை கிட்டிவிடும்.
மேனி நுடங்காது - உடலை வருத்திக்கொள்ளாமல்
துப்பார் திருமேனி - பவளம் போன்ற செக்கச் செவேல் நிறத் திருமேனி
Subscribe to:
Posts (Atom)
