Showing posts with label நல்லினம் சேர்தல். Show all posts
Showing posts with label நல்லினம் சேர்தல். Show all posts

Tuesday, December 15, 2009

நல்லாரோடு சேர்தல்!

அறியாப் பருவத்து
அடங்காரோடு ஒன்றி,
நெறியல்ல செய்தொழுகி யவ்வும்,
நெறியறிந்த நற்சார்வு சாரக்,
கெடுமே
வெயின் முறுகப் புற்பனிப்
பற்றுவிட் டாங்கு.

-நல்லினம் சேர்தல், நாலடியார்(171)


நன்மை தருவது / தீமை விளைப்பது இதுவென
அறியாத இளம்பருவத்தில்,
அடக்கமில்லாத தீயவரோடு சேர்ந்து, திரிந்து செய்த
முறையில்லாத செயல்களும், குற்றங்களும்,

வெயில் அதிகமாகப்
புல்லின் நுனியிலேயுள்ள பனியானது,
புல்லைவிட்டு நீங்கிப் போவதுபோல,


நன்மையான வழிகளை மட்டுமே அறிந்த
நல்லவர்களுடன் சேர்ந்தால்,
நீங்கிப் போய்விடும்.