Showing posts with label நளவெண்பா. Show all posts
Showing posts with label நளவெண்பா. Show all posts

Thursday, December 17, 2009

பெண்மை அரசு

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே

பெண்மை அரசு.

-நளவெண்பா(39)


நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனப்படும்
நான்கு குணங்களே நான்கு வகைச் சேனைகளாகவும்,

ஐம்புலன்களுமே நல்ல அமைச்சர்களாகவும்,

ஒலி முழங்கும் காற்சிலம்பே அழகிய முரசாகவும்,

வேற்படையும், வாளுமே கண்களாகக் கொண்டு,

தன் முகமாகிய நிலாவட்டக் குடையின் கீழாக
வீற்றிருக்கின்ற பெண்மை அரசின் தன்மையுடன்
விளங்குபவள் அவள் (தமயந்தி).

Tuesday, December 1, 2009

கல்லாருமிலர்! இல்லாருமிலர்!

தெரிவனநூல் என்றும்
தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே -
ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே
இகழ்ந்தெவரும்
கல்லா தனவும்
கரவு.

-நளவெண்பா(23)


நளன் அரசாண்ட நிடத நாட்டின் சிறப்பை விவரிப்பது.

இந்நகரத்தில்
எங்கும் தெரிவது - நல்ல நூல்கள்!
தெரியாதிருப்பது - வரிகள் பொருந்திய வளைகள் அணிந்துள்ள மாதர்களுடைய இடை!
எப்பொழுதுமே இல்லாதிருப்பது - இரத்தல் (அ) பிச்சையெடுத்தல்!
எல்லோரும் இகழ்ச்சியுடன் ஒதுக்கிக் கற்றுக்கொள்ளாதது - வஞ்சனை செய்தல்!