Showing posts with label செல்வம். Show all posts
Showing posts with label செல்வம். Show all posts

Wednesday, December 23, 2009

பிறகு பார்க்கலாம்!

எத்துணை யானும்,
இயைந்த அளவினால்,
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்;
மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால்,
'பின்னறிதும்!' என்பார்
அழித்தார்,
பழிகடலுத் துள்.

-துன்ப இயல், நாலடியார்(272)


தம்மால் இயன்ற அளவு எவ்வளவேயாயினும்,
சிறிய தருமங்களைச் செய்து வருபவர்கள்
எக்காலத்திலும் மேன்மை நிலையில் இருப்பார்கள்;

பெருஞ்செல்வம் இருந்தும் தருமம் செய்யாது,
'பிறகு பார்க்கலாம்' என்றிருப்பவர்கள்,
'உலக நிந்தனை'க் கடலிலே சிக்கி அழிந்து போவர்.

தலைப்படல் - மேன்மைப்படுதல்
பழி கடலம் - கடல் அளவான பழிச்சொற்களின் மிகுதி

Saturday, December 5, 2009

செல்வப்பயனை அறியாதவர்!

எட்டி பழுத்த,
இருங்கனி வீழ்ந்தன,
ஒட்டிய நல்லறம்
செய்யாதவர் செல்வம்;
வட்டிகொண்டு ஈட்டியே
மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர்
பயன்அறி யாரே.

-திருமந்திரம்(260)


தங்களுக்குப் பொருத்தமான நல்லறத்தைச் செய்யாதவரின் செல்வம்,
எட்டி மரத்தின் பெரிய பழம் பழுத்து, யாருக்கும் பயன்படாது விழுந்து கிடந்ததைப் போலாகும்.
உலகில், வட்டி மேல் வட்டி வாங்கி, மற்றவர்களின் பொருள்களைக் கவர்ந்து கொள்ளும்
வஞ்சமுடையவர்கள், செல்வத்தின் பயனை அறியாதவர்கள் ஆவார்கள்.

எட்டிப் பழம் அழகாயிருந்தாலும், கசப்பாயிருப்பதால் பயன்படாதது போல,
அறம் செய்யாதவனின் செல்வம் பயன்படாது!

பட்டிப் பதகர் - வஞ்சனையை உடைய பாதகர்