எத்துணை யானும்,
இயைந்த அளவினால்,
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்;
மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால்,
'பின்னறிதும்!' என்பார்
அழித்தார்,
பழிகடலுத் துள்.
-துன்ப இயல், நாலடியார்(272)
தம்மால் இயன்ற அளவு எவ்வளவேயாயினும்,
சிறிய தருமங்களைச் செய்து வருபவர்கள்
எக்காலத்திலும் மேன்மை நிலையில் இருப்பார்கள்;
பெருஞ்செல்வம் இருந்தும் தருமம் செய்யாது,
'பிறகு பார்க்கலாம்' என்றிருப்பவர்கள்,
'உலக நிந்தனை'க் கடலிலே சிக்கி அழிந்து போவர்.
தலைப்படல் - மேன்மைப்படுதல்
பழி கடலம் - கடல் அளவான பழிச்சொற்களின் மிகுதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment